districts

img

பிச்சாவரத்தில் ஆலிவ் ரெட்லி கடல் ஆமை குஞ்சுகள்

சிதம்பரம், மார் 22- சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வன சரகத்தில் ஆண்டு தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை கடல் ஆமை முட்டை கள் சேகரம் செய்து செயற்கை பொறிப்ப கத்தில் பாதுகாத்து குஞ்சுகள் பொறித்த வுடன் பாதுகாப்பாக கடலில் விடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான ஆமை முட்டை களை பிச்சாவரம் மாங்குரோவ் காட்டினை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் செயற்கை ஆமை முட்டைகள் பொறிப்பகம் அமைத்து அப்பகுதிகளில் ஆமை முட்டைகள் சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அதில் இருந்தும் வரும் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்சி நடைபெற்றது. இதில் வனச் சரக அலுவலர் கமலக் கண்ணன் முன்னிலையில் ராஜ முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துத்துறை தலைவர் ராமநாதன், மற்றும் மகப்பேறு மருத்து வர் ஜெயஸ்ரீ, கடலூர் குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுனரும் இயற்கை ஆர்வளருமான இளந்திரைன் மற்றும் இயற்கை ஆர்வலர்கள். சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, பிச்சா வரம் வனச்சரக வனவர் அருள்தாஸ், வனக்காப்பாளர் ராஜேஷ்குமார், வனப் பணி  யாளர்கள், மாணவர்கள் 2,137 ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டனர். இதுவரை பிச்சாவரம் வனசரகத்தில் 35,412 ஆமை முட்டைகள் சேகரம் செய்து அதில் 8,961 குஞ்சு பொறிக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளது. வரும் மே மாதம் வரை குஞ்சுகள் கடலில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஆலிவ்ரெட்லி வகை ஆமைகள் கடலில் மீன் வளத்தை அழிக்ககூடிய ஜெல்லி வகை மீன்களை அழிக்ககூடியது. எனவே கடலில் ஜல்லி வகை மீன்கள் அதி களவு பெருகிவிட்டால் மீன்கள் கடலில் இருக்காது. அதனால் ஆண்டு தோறும் இந்த ஆமைக் குஞ்சுகளை அதிகளவில் கடலில் விடும் நிகழ்ச்சி வனத்துறை சார்பில் நடைபெறுகிறது. மேலும் இந்த ஆண்டு முட்டையில் இருந்து வெளி வரும் ஆமைக்குஞ்சு அடுத்த ஆண்டு இதே நேரத்தில் அதே இடத்தை தேடி வந்து முட்டையிட்டு செல்லும் என்பது குறிப்பிடதக்கது.