சிதம்பரம், ஜூலை 25- அண்ணாமலை பல்கலைக்கழக அரசு செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு செவிலியர் பயிலும் மாண வர்கள் தீப ஒளி ஏற்றி, உறுதிமொழி எடுக் கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் சண்முகம் தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக் கழக துணை வேந்தர் இராம கதிரேசன் முதன்மை விருந்தினராக பங்கேற்று, குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தீப ஒளி யின் மகிமையை எடுத்துரைத்து, மன அழுத்தத்தை நீக்க அன்பை கடைப் பிடிக்க திருமூலர் கூரிய அன்பும் சிவனும் ஒன்றே என்பதை சுட்டிக்க்காட்டி இடையூறுகளின் போது அமைதியை கையாளவும் நாம் உயர் நிலையை அடைந்தவுடன் இந்த நிலைக்கு காரணமான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மறவாது இருக்கவும் சமுதாயத்திற்கு சேவை செய்வதில் ஈடு படுத்திக் கொள்ளுமாறும் செவிலியர்களை கேட்டுக்கொண்டார். மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் லாவண்யா குமாரி, செவிலியர் கல்லூரி முதல்வர் கலாவதி, இணைப்பேராசிரியர் ஜெயலட்சுமி ஆகியோரும் பேசினர். அண்ணாமலை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி ரெத்தினசம்பத், பேராசிரியர் ரவிச்சந்திரன், துணைவேந்தரின் நேர்முகச் செயலாளர் பாக்கியராஜ், மருத்துவமனை பேராசிரி யர்கள், மருத்துவர்கள் சுபஸ்ரீ, கோபி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.