districts

img

லாப பங்கீடு வழங்கிய நெய்வேலி கூட்டுறவு சங்கம்!

கடலூர், டிச.12- நெய்வேலி கூட்டுறவு சங்கத்தின் லாப பங்கீடு தொகையை இயக்குநர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநரிடம் வழங்கினர். கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி-யில் பணி யாளர்கள் சிக்கனம் மற்றும் சேமிப்பு நாணயச் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்க நிர்வாகக்குழு தேர்தலில் சிஐடியு வெற்றிபெற்று நிர்வாகத்தை நிர்வகித்து வருகிறது. இச்சங்கம் 2021-2022 ஆம் ஆண்டுக்கு லாபப் பிரிவினையில் செலுத்த வேண்டிய சட்டபூர்வ நிதிகளான கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி என மொத்தம் ரூ. 68.99 லட்சத்தை கூட்டுறவு துறை யிடம் வழங்கப்பட்டது. நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு ஒன்றி யத்தின் மேலாண்மை இயக்கு நர் தேவியிடம் சங்கத்தின் நிர்வாகக்குழு தலைவர் ஆரோக்கிய தாஸ் காசோலையை வழங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள், கவிதா, அன்பழகன், தாமோதரன், லட்சு மணன், ரேவதி, வீராசாமி, அண்ணாதுரை, சங்கத்தின் செயலாளர் முத்து மற்றும் சங்கத்தின் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.