districts

img

கடலூரில் வானவில் மன்றம் துவக்கம்

கடலூர், டிச. 7- தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அறிவி யல் மற்றும் கணிதம் செயல் முறையில் விளக்கிட "வானவில் மன்றம்" என்ற அமைப்பை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், அறிவியல் செய்முறை கருவிகள் பெட்டி வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்விற்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தாமோதரன், இந்திய வளர்ச்சி இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.அறிவழகன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள 13 ஒன்றியங்களில் 30 கருத்தாளர்களுக்கு செயல்முறை அறிவியல் பெட்டி வழங்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.கார்த்திகேயன் நன்றி கூறினார்.