கடலூர், பிப்.17- கடலூர் மாநகர அனைத்து கட்சிகள், பொதுநல அமைப்புகள், குடியிருப்போர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சூரப்பநாயக்கன் சாவடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், சிபிஐ மாவட்ட துணை செயலாளர் குளோப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ரஹீம், அனைத்து குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன், ரங்கநாதன், தேவநாதன், சேகர் (மதிமுக), பாலு, ரவி (மக்கள் அதிகாரம்), வழக்கறிஞர் திருமார்பன் (விசிக), அனைத்து பொதுநல அமைப்புகளின் செயலாளர் ரவி, இஸ்மாயில் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ரமேஷ் (விடுதலை வேங்கை), வி.சுப்புரா யன், ஜே.ராஜேஷ்கண்ணன், ஆர்.அமர்நாத் (சிபிஐஎம்), நாகராஜ் (சிபிஐ), பால்கி (தமுஎகச), சுப்புராயன் (மீனவர் பேர மைப்பு), ரமேஷ், கோபால் (காங்கிரஸ்) உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
தீர்மானங்கள்
கடலூர் மாநகராட்சியில் செயல்படாத பழுதடைந்த கம்மியம்பேட்டை, மஞ்சக் குப்பம் மின்தகன மேடைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். அனைத்து வார்டுகளி லும் தினசரி குப்பை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்துள்ள சாக்கடை நீர் கலக்கும் குடிநீர் குழாய்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து தெருக்களிலும் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும். சேதமடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். கடலூர் பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முடிவை திரும்ப பெற வேண்டும். தவறான தகவல் அளிக்கும் வல்லுநர் குழு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். தற்போதைய பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்த வேண்டும். கொண்டங்கி ஏரி அருகில் பேருந்து நிலையம் அமைப்பதால் மாசுபடும் என்பதால் 4 கிலோ மீட்டர் அருகில் எதுவும் அமைக்கக் கூடாது என பசுமை தீர்ப்பாயம் விதி உள்ளது இதை மீறுவதாக அமைந் துள்ளது. பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முடிவை கண்டித்தும், மாநக ராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய கோரியும் அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்பு கள், குடியிருப்போர் சங்கங்கள் சார்பில் மார்ச் 9ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனை விளக்கி மார்ச் 4ஆம் தேதி கடலூர் மாநகரம் முழுவ தும் தெருமுனை கூட்டம், பிரச்சார இயக்கம் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.