districts

img

விடுமுறை வழங்காததால் அதிகாரியின் வாகனத்தை எரித்த தீயணைப்பு வீரர்கள் கைது

கடலூர், ஜூன் 29 - பண்ருட்டி தீயணைப்புத் துறையில் விடுப்பு வழங்காமல் அலைக்கழித்த நிலைய அலுவலரின் இருசக்கர வாக னத்தை தீ வைத்து கொளுத்திய இரண்டு தீயணைப்பு வீரர்கள் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தீய ணைப்புத்துறை அலுவலகத்தில் நிலைய அலுவலராக பணி புரிந்து வருபவர் வேல்முருகன் (வயது 54). இவர் அலு வலகத்தில் பணி புரியும் தீயணைப்பு படை வீரர்களுக்கு விடுப்பு வழங்காமல் அலைக்கழிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணிபுரியும் தீய ணைப்பு படை வீரர்கள் குமரேசன் (30), அருள் பிரகாஷ் ( 37) ஆகிய இருவரும் விடுப்பு கேட்டுள்ளனர். இதற்கு தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வேல்முருகன் மறுப்பு தெரி வித்ததால் ஆத்திரமடைந்த குமரேசன், அருள்பிரகாஷ் ஆகிய இருவரும் நிலைய அலுவலரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்று பண்ருட்டி கெடிலம் ஆற்றுப்பகுதியில் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

முற்றிலும் எரிந்த வாக னத்தை கைப்பற்றிய பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வாகனம் காண வில்லை என்று தீயணைப்பு நிலைய  அலுவலர் வேல்முருகன் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிபடையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில்  இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய குமரேசன், அருள் பிரகாஷ் ஆகிய இருவரையும் சிசிடிவி காட்சிகளின் அடிபடையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.