districts

img

நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்: கண்ணீர் சிந்தும் விவசாயிகள்

 கடலூர், ஜூலை 8 - பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் எடை போடாமல் தேங்கி உள்ளது. 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டு, காவனூர்,  கரும்பூர், அவியனூர் பைத்தாம்பாடி,  எனதிரிமங்கலம், அக்கடவல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக் கான  ஏக்கரில்  விவசாயிகள் நெல் பயிரிடுகின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகள் குறுவை பட்டத்தில் அறுவடை செய்த நெல் மணிகளை உளுந்தாம்பட்டு பகுதியில் உள்ள அரசு நேரடி நெல்  கொள்முதல் நிலையத்திற்கு  தினந் தோறும் நூற்றுக் கணக்கான நெல் மூட்டைகள் கொண்டு வருகின்றனர்.

இந்த நெல் கொள்முதல் நிலையத் தில் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300  நெல் மூட்டைகள் மட்டுமே ஊழியர்கள்  எடை போட்டு கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் எடை போடா மல், வியாபாரிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊழியர்கள் எடை போட்டு கொள்முதல் செய்கின்றனர் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதில் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் எடை போடாமல் தேக்கம்  அடைகிறது. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் திடீர் கனமழை பெய்து வருவதால் நெல் கொள்முதல் நிலையத்தில் எடை போடாமல் வைக் கப்பட்ட நெல்  மழையில் நனைந்து சேதம் அடைகிறது. மழையில் நனைந்த நெல் மணிகளை உலர வைக்க இடம் இல்லாமல் விவசாயிகள் சிரமப் படுகின்றனர்.

நெல் மணிகள் கொட்டப்பட்ட இடம்  சுற்றி சேரும் சகதியுமாக காணப்படு கிறது. தொடர்ந்து மழை பெய்தால் அறுவடை செய்த நூற்றுக் கணக்கான நெல் மூட்டைகள் முளைத்துவிடும்  நிலை  உள்ளதாக  விவசாயிகள் கண்ணீர் சிந்துகிறார். விவசாயிகள் நாள்தோறும் அறுவடை செய்த நெல்  மணிகளை அன்றே அரசு நேரடி கொள் முதல் நிலையத்தில் எடை போட்டு கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும் நெல் மணிகள் கொட்டு வதற்கு சிமெண்ட் களம் அமைத்துக்   கொடுக்க வேண்டும் என்று விவசாயி கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.