districts

img

முதியோர் தொழிலகம் தொடங்க வேண்டும்

கடலூர், ஜூலை 15- மூத்த குடிமக்கள் வருமானம் உள்ள வர்களாக வாழ்ந்திட தமிழ்நாடு அரசு முதியோர் தொழிலகம் தொடங்க வேண்டும் என்று அகில பாரதமூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பு வலியுறுத்துள்ளது.

 இந்த சங்கத்தின் 30 வது ஆண்டு முத்து விழா கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு கூட்ட மைப்பின் தலைவர் ச. சிவராமன் தலைமை தாங்கினார். பொருளாளர் கு.ராதா கிருஷ்ணன் வரவேற்றார்.  துணைத்தலைவர் சி.பக்கிரி, தணிக்கையாளர்கள் ஆ. பன்னீர்செல்வம், சு.ராமகிருஷ்ணன், நாக ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாகித்ய அகடாமி விருத்தாளர் குறிஞ்சி வேலன், சங்கத்தின் மாநில தலைவர் அ.இராஜண்ணன், மாநிலத் துணைத் தலைவர் ராமு. சிதம்பரம், மாநில பொதுச் செயலாளர் அ.தங்கராசா, மாநில பொரு ளாளர் ச.ராமசாமி, மா.சுஜாதா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் வ.சிவகுருநாதன், சேது.விவேகானந்தன், பி.வி.கே.ரமணி, என்.காசிநாதன், ந.பக்த வச்சலம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.  கூட்டத்தில் 1998, 99 மற்றும் 2000 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நிய மனம் பெற்று பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் பணி முடித்து பணி வரன்முறை செய்யப்பட்ட கடலூர் மாநகராட்சியால் ஆணை வழங்கப்பட்டு ஓய்வு பெற்றுள்ள தூய்மை பணியாளர்களுக்கு பென்ஷன் உத்தரவை நிறுத்தாமல் தமிழக அரசு வழங்க வேண்டும்.

கடலூர் மாநகராட்சியில் ஓய்வு பெற்று விட்ட தூய்மை பணியாளர்களுக்கு நிலு வையில் உள்ள பி.எப் வட்டி தொகையை வழங்க வேண்டும்,  தமிழக அரசின் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை குடும்ப பென்சனர்களுக்கும் தமிழக அரசு விரி வாக்க வேண்டும்,  70 வயதை கடந்த பென்சன்தாரர்களுக்கு முதல்வர் சொன்ன படி 10 விழுக்காடு கூடுதல் பென்சன் தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநகரத் தலைவர் நா. பக்கிரி நன்றி கூறினார்.