கடலூர் மார்ச் 25- கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் முந்திரி, பலா, வாழை, முருங்கை உள்ளிட்டவை சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பண்ருட்டி அடுத்துள்ள மருங்கூர், காட்டாண்டிக்குப்பம், மானடிக்குப்பம், முத்தாண்டிக்குப்பம், பாவைகுளம், கொஞ்சிக்குப்பம், அரசடிக்குப்பம், ஏ.புதூர், சிறுதொண்டமாதேவி, அழகப்ப சமுத்திரம், வேகாக்கொள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை யுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் பூ, பிஞ்சு, காய்களுடன் இருந்த முந்திரி மரக்கிளைகள், காய்களுடன் இருந்த பலா மரக்கிளைகள், வாழை, முருங்கை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. ஆண்டுக்கு ஒரு முறை மகசூல் தரும் முந்திரி, பலா மரக் கிளைகள் அறு வடைக்கு தயாராக இருந்த நிலையில் முறிந்து காய்கள் உதிர்ந்துள்ளது. மேலும், பலா உள்ளிட்ட மரக்கன்றுகள் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.