கடலூர், பிப்.11- இந்தியாவில் முதல் முறை யாக சென்னையில் 1923 ஆண்டு மே தின ஊர்வலத்தை நடத்திய வர் சிந்தனை சிற்பி தோழர் மா.சிங்காரவேலர்.
1925 ஆம் ஆண்டு கம்யூ னிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டை தலைமையேற்று நடத்தியவர். அவரது 78 வது நினைவு தினத்தை யொட்டி, கடலூர் சிஐடியு அலுவல கத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். மாநகர செய லாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், ஜெ.ராஜேஷ் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பி னர் எஸ்.கே.பக்கிரான், சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க சம் மேளன துணைத் தலைவர் ஜி.பாஸ்கரன், கண்ணன், தட்சி ணாமூர்த்தி, தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.