districts

img

கடலூரில் சிபிஎம் பிரச்சாரம் உ.வாசுகி தொடங்கி வைத்தார்

கடலூர், ஆக. 28 - மக்கள் விரோத மோடி ஆட்சிக்கு முடிவு கட்டு வோம் என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக முழுவதும் பிரச்சாரம் நடை பெறுகிறது. இதன் ஒருபகுதி யாக கடலூரில் பிரச் சாரத்தை மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி துவக்கி வைத்து பேசினார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும், அரசு துறைகளில் காலி யாக உள்ள பணியிடங் களை நிரப்ப வேண்டும்,  என்எல்சி நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னு ரிமை வழங்க வேண்டும், அரிசி, மாவு, தயிர், உள்ளிட்ட உணவு பொருட் கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த பிரச்சாரம் நடைபெற்றது. கடலூர் ஜவான் பவன் அருகில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு மாநகர உறுப்பினர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் கோ. மாதவன், செயற்குழு உறுப்பினர் வி.சுப்பராயன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் பேசினர்.

;