districts

img

தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம்

சிதம்பரம், ஜூலை 13- அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியி லுள்ள ராணி சீதை அரசு மேல்நிலைப் பள்ளி யில்  தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல் பாடுகள் குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.  பேரூராட்சித் தலைவர் க.பழனி தலைமை தாங்கினார்.  துணைத் தலை வர் தமிழ்செல்வி, செயல் அலுவலர் பாலமுருகன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள்   பள்ளி தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிக்க மாண வர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து தூய்மை குறித்து பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை பேரூ ராட்சித் தலைவர் பழனி வழங்கினார்.