கடலூர், மார்ச் 8- தொழிலாளர்களின் கோரிக்கையை பேசித் தீர்க்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் சிப்காட்டில் உண்ணாநிலை போராட்டம் நடை பெற்றது. கடலூர் சிப்காட் வளாகத்திலுள்ள சுப்ரீம் டைகெம் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களின் பொது கோரிக்கை களை பேசி தீர்க்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் தலைவர் எல்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஆளவந்தார் போராட்டத்தை துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் நிறைவு செய்து பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் கிருஷ்ண மூர்த்தி, இணைச் செயலாளர்கள் திரு முருகன், துணைத்தலைவர் சாந்தகுமாரி, மாவட்டக் குழு உறுப்பினர் சிவானந்தம், தலைவர் குமார், பயோனியர் தலைவர் சந்திரசேகரன், செயலாளர் பார்த்தசாரதி, செயலாளர் சுநாத், பாண்டியன், இணை செயலாளர் மதியழகன், பொருளாளர் சம்பத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.