districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமை விருத்தாசலத்தில் நடத்த கோரிக்கை

கடலூர், நவ. 16- விருத்தாசலத்திலேயே மாற்றுத்திறனாளிக்கான முகாம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி கம்மாபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் நடத்திய தொடர் போராட்டத் தின் விளைவாக கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் அடை யாள அட்டை வழங்க உத்தர விடப்பட்டது. விருத்தாசலத்தில் மாதம் 3ஆவது புதன்கிழமை முகாம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் அங்கு முகாம் நடத்தாமல் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் வகையில்  கம்மாபுரம் மருத்துவமனை யில் முகாம் நடத்தப்படுகி றது. விருத்தாசலத்திலேயே முகாம் நடத்தக் கோரி மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆளவந்தார், மாவட்டக் குழு உறுப்பினர் தமிழ்மணி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சின்னத்தம்பி, விவயாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி பி.வீரமணி, கிளைச் செயலாளர்கள் அடைக்கலம், சாமிதுரை, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் வரும் டிசம்பர் மாதம் 3ஆவது புதன்கிழமை விருத்தாசலம் அரசு மருத்து வமனையிலேயே முகாம் நடத்துவதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.