districts

img

ஊராட்சிமன்ற நிர்வாகிகளின் மோதலால் கண்டுகொள்ளப்படாத அடிப்படை பிரச்சனைகள்

கடலூர்,நவ.23- கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள வடக்கு ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட நகர்களில் ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தலைவர், உதவித் தலைவர் மோதல் காரணமாக நிலைகுலைந்துள்ளது தலைவர், உதவித் தலைவர் வார்டு உறுப்பினர்களுக்கும் நடக்கும் சண்டை காவல் நிலையம் வரை சென்றுள்ளது. இவர்கள் கமிஷன் பிரிப்பதி லும், ஒப்பந்தங்கள் யாருக்கு என்ப திலுமே குறியாக உள்ளனர். மேலும் வீடு கட்டுவதற்கும், குடிநீர் இணைப்பு வழங்கவும் கமிஷன் எதிர்ப்பார்க்கின்றனர். அதை வசூல் செய்வதிலும் போட்டி நடக்கிறது.  தங்களுக்கு நடக்கும் சண்டைகளை தள்ளி வைத்து குண்டும், குழியுமான சாலைகளை தார் சாலையாக மாற்ற வேண்டும், தெரு விளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும், குப்பை களை தினசரியாக அகற்ற வேண்டும், கொசு மருந்து அடிக்க வேண்டும், குடி நீர் வசதி ஏற்படும் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது கே.மணி தலைமை தாங்கி னார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு, நெய்வேலி நகரச் செயலாளர் ஆர்.பாலமுருகன்,  முன்னாள் செயற்குழு வி. முத்துவேல், நெய்வேலி சிஐடியு தலை வர் டி.ெஜயராமன், நிர்வாகி கள் வேல்முருகன், குப்பு சாமி,  மாதர் சங்க மாநில செயற் குழு உறுப்பினர் வி.மேரி, குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செய லாளர் தண்டபாணி உள்ளிட் டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.