கடலூர், ஜூன் 16- “விக்கிரவாண்டி இடைத்தேர்த லில் தோற்றுவிடுவோம் என்று இய லாமையை மறைக்க சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார் எடப் பாடி பழனிசாமி” என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர் சித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயில் அருகே உள்ள முட்டம் கிராமத்தை சேர்ந்த சின்ன துரை குவைத் தீவிபத்தில் உயிரி ழந்தார். அவரது குடும்பத்தா ருக்கு அரசு சார்பில் நிதி வழங்கும் நிகழ்ச்சி ஜூன் 16 அன்று நடைபெற் றது. இதில் பங்கேற்ற தமிழக வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந் தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “விக்கிரவாண்டி இடைத்தேர் தலை அதிமுக புறக்கணித்திருப் பதே எங்களுக்கு முதல் வெற்றி ஆகும். ஆனால் அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் நகைப்புக்கு உரியது. புதுச்சேரியை சேர்த்து தமி ழகத்தில் 40 நாடாளுமன்ற தொகு திகளில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் தேர்தல் நடந்துள்ளது. இதுவே மிக முக்கிய சாட்சி. விக் கிரவாண்டி இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று இயலா மையை மறைக்க சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எடப்பாடி பழனி சாமி கூறுகிறார் என்று தெரிவித் தார்.