districts

img

100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி வழங்குக

கடலூர்,ஜூன் 26- பண்ருட்டியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியை உடனடியாக துவங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தின் சம்பளத்தை 450 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், பிரதம மந்திரி வீடு  கட்டும் திட்டம், ஆவாஸ் பிளஸ் வீடு கட்டும் திட்டம், கேவிடி திட்டம் ,கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் தேர்வு செய்யப்பட் டுள்ள பயனாளிகள் அனைவருக்கும் உடன டியாக வீடு கட்ட பணி உத்தரவு வழங்கிட வேண்டும் என  வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் எ.பன்னீர் தலைமை தாங்கினார். வட்டத் தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் வெங்க டேசன், கொளஞ்சிஅம்மாள், மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்டப் பொருளாளர் டி.கிருஷ்ணன், சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.கே.ஏழுமலை , விவசாய சங்க வட்டச் செயலாளர்  பி.குமரகுருபரன், நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் இ.சுந்தர பாண்டியன், விவசாய சங்க துணைத் தலை வர் லோகநாதன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.