உதகை, ஜூலை 27- உதகை அருகே பள்ளி சிறுமியை திருமணம் செய்த வாலி பரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். உதகை க்ரீன்பீல்டு பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி எல்க்ஹில் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு 18 வயது வாலிபருடன் ஏற் பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் எல்க் ஹில் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன்பின் உதகையில் உள்ள தங் கும் விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுமி காணவில்லை என்றவுடன் தாயாருக்கு தக வல் அளித்ததன் பேரில், பதட்டமடைந்த சிறுமியின் தாயார் உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் சிறுமியை பல் வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில், உதகை தங் கும் விடுதியில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிய வந்த நிலையில், இருவரையும் பள்ளி சிறுமியையும், திருமணம் செய்த வாலிபரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும், அறை எடுத்து தங்கியதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும், சிறு மியை குழந்தை பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தனர்.