உதகமண்டலம், ஜன.18- நீலகிரி மாவட்டம், உதகை அருகே தலைகுந்தா பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி தம்பதியின் 9 வயது மகள், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், செவ்வாயன்று தலைக்குந்தா பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவில் திருவிழா நடை பெற்றது.
விடுமுறை தினம் என்பதால் 9 வயது சிறுமியும், தனது தோழிகளு டன் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து, திருவிழா முடிந்து வீடு திரும்பிய அச்சிறுமியை, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த அஜித் (23) என்பவர், வழிமறித்து தாத்தாவிடம் அழைத்துச் செல்வதாக ஏமாற்றி வனப் பகுதிக்குள் அழைத்துச் சென்று சிறுமி யை பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமி அலறியுள்ளார். சிறுமியின் அல றல் சத்தம் கேட்டு, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வனப்பகுதிக்குள் சென்று பார்த்துள்ளனர். பொதுமக்கள் வரு வதை அறிந்த அஜித் அங்கிருந்து தப்பி யுள்ளார். இதையடுத்து, சிறுமியை மீட்ட பொதுமக்கள் உதகை அரசு தலை மை மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர். தப்பியோடிய அஜித்தை ஊர் மக்கள் ஒன்று திரண்டு பிடித்து புதுமந்து போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். போலீசார் போக்சோ உள் பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.
பிடிபட்ட குற்றவாளி கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்கனவே அதே பகு தியை சேர்ந்த தனது நண்பரின் சகோத ரியான 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் என்பதால், அவருக்கு மீண்டும் ஜாமீன் வழங்கக் கூடாது, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தலைக்குந்தா சந்திப்பில், பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற உதகை கோட்டாட்சியர் மகாராஜ், மாவட்ட குழந் தைகள் நல அலுவலர் பாமா, நீலகிரி கூடு தல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தர வேல், காவல்துறை கண்காணிப்பாளர் யசோதா மற்றும் போலீசார் பொதுமக்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், அஜித்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதி காரிகள் உறுதி அளித்தனர். பொதுமக்களின் மறியல் போரா ட்டம் காரணமாக உதகை - மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.