districts

img

சுற்றுலா பயணிகளை கவரும் நாகலிங்க மலர்கள்

உதகை, ஜூன் 14- உதகையில் இளஞ்சிவப்பு வண் ணமும், சிவப்பு வண்ணமும் கலந்து மாறுபட்ட தோற்றத்துடன் காணப்படும் நாகலிங்க மலர்கள் சுற்றுலா பயணி களை வெகுவாக கவர்ந்து வருகி றது. மிதமான தட்பவெப்ப நிலையில் வளரும் தன்மை கொண்ட நாலிங்க மரங்கள், நீலகிரி மாவட்டத்தில் பர்லி யாறு, பொக்காபுரம் பகுதியில் அதிகம் காணப்படுகிறது. குன்னூர் -மேட்டுப் பாளையம் தேசிய நெடுஞ்சாலை யோரம் பர்லியாறு பகுதியில் நாக லிங்க மலர்கள் தற்போது பூத்து குலுங்கி வருகிறது. இது சுற்றுலா பய ணிகளை கவர்ந்து வருகிறது. இதனால் இவ்வழியாக வரும் சுற்றுலா பயணி கள் ஆர்வத்துடன் அதனை பார்த்து பார்த்து ரசிப்பதுடன் புகைப்படமும் எடுத்து செல்கின்றனர். இதன் காய்கள் பீரங்கி குண்டுகள் போல் இருப்பதால் ஆங்கிலத்தில் “பீரங்கி குண்டு மரம்”  எனவும் அழைக்கப்படுகிறது. இம்மரத்தில் ஆண்டுதோறும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் மலர் கள் பூத்து குலுங்கும். நீண்ட கிளை கள் போன்ற காம்புகளில் பூக்கள் பூப்ப தால் மரமே பூக்கள் நிறைந்து காட்சி யளிக்கும். ஒரு மரத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக ஆயிரம் மலர்கள் கூடப்பூக்கலாம். பல நாடுகளில் அலங் காரத்துக்காக இம்மரம் வளர்க்கப்படு கிறது. பாம்பு படமெடுப்பது போன்று மலரின் தோற்றம் காணப்படுகிறது.