districts

img

நீலகிரியில் கனமழை 99 பேர் முகாம்களில் தங்கவைப்பு

உதகை, ஜூலை 25- நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், 99 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்த கிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் அருகே 6 தாலுகாக்களில் நிலச் சரிவு ஏற்பட கூடிய அபாயகரமான 283 இடங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இந்நிலையில் பல்வேறு துறை அதிகாரிகள் அடங் கிய 42 மண்டல குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  பொதுமக்களை பாதுகாப்பாக வைக்க 456 நிவா ரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தொடர் மழை பெய்து வருவதால் நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி குன்னூர் முகாமில் 4  குழந்தைகள் உள்பட 28 பேர், கூடலூர்  புத்தூர் வயலில் 25 குழந்தைகள் உட்பட 71 பேர் என மொத்தம் 99 பேர் தங்கியுள்ள னர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப் படை வசதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. வெள்ளப் பெருக்கு மற்றும் வீடுகள் இடியும் நிலையில் உள்ளவர்கள் முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு மையங்களுக்கு வர வேண்டும் என அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ,இன்னசென்ட் திவ்யா கூறுகையில், கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளன. மரங்கள் விழுந்து மண் சரிவுகள் ஏற் பட்டு நெடுஞ்சாலைகளில் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் போக்குவரத்து சரி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை  பாதிப்பு அதிகமாக இல்லை. இருப்பினும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் வருகின்றனர். உதகைக்கு ஒரு குழு, கூடலூருக்கு ஒரு குழு அனுப்பி வைக்கப்படுகிறது. இரவு நேரங்களில் மழை அதிகமாக இருப்பதால் அபாயகரமான பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது, என்றார்.

;