districts

பொதுமக்களுக்கு மூலிகை தேநீர் வழங்கல்

உடுமலை, ஆக.5- உடுமலை கிளை நூலகம் மற்றும் அரசு மருத்துவமனை, யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் இணைந்து பொதுமக்களுக்கு மூலிகை தேநீர் வழங்கப்பட்டது. உடுமலை உழவர் சந்தை  எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டு உடுமலை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் இணைந்து கொரானா பரவலைத் தடுக்க அரசு வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு மூலிகை தேநீர் வழங்கும் முகாம் நடை பெற்றது. தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும்  முகாமிற்கு நூலகர் கணேசன் தலைமை வகித்தார். நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவகுமார், நூலக வாசகர் வட்ட ஆலோச கர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் உடு மலை அரசு மருத்துவமனை இயற்கை யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் டாக்டர் ராகவேந்திரா சாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மூலிகை தேநீர் வழங்கி னார்.

தொடர்ந்து ஒரு வாரம் மூலிகை தேநீர் வழங்கும் முகாம் நூலக வளாகத்தில் காலை 8 மணி முதல் 12 மணி வரை மூலிகை தேநீர் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முகாமிற்கான ஏற்பாடுகளை நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நூல்கள் மகேந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

;