ஈரோடு, நவ.27- வணிக பயன்பாட்டு வாடகை கட்டி டங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என ஒன்றிய அரசின் உத்த ரவு, வருமானத்தில் முக்கால்வாசி வரிக்கே போய்விடும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்றிய அரசின் இந்த நடைமுறையை கண்டித்து ஈரோட்டில் வேலை நிறுத்த போராட் டத்திற்கு அனைத்து தொழில் வணிக நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தொழில், வணிக நிறுவனங்களின் 76 சங்கங்களும் இணைந்த மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்கள் கூட்டமைப்பின் அவ சர கூட்டம் செவ்வாயன்று நடைபெற் றது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்களைப் பற்றிய செய்தியாளர்களி டம் அதன் தலைவர் வி.கே.ராஜமாணிக் கம் புதனன்று பேசினார். அப்போது, வாடகைக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது ஒன்றிய அரசு. அதை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளோம்.
வாடகைக்கு 18 விழுக் காடு என்பது குடும்பத்தில் உத்தேச வாடகையை நிர்ணயம் செய்து ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று சொல்வது கூட் டுக் குடும்ப வாழ்க்கையை சிதைப் பது போன்ற உணர்வை எங்களுக்கு ஏற் படுத்துகிறது. தந்தை, மகன், கணவன், மனைவி பெயரில் ஒரு நிறுவனமோ அல்லது குடோன் இருந்தாலோ, ஆர்சி இருந்தாலோ அவர்கள் உத்தேச வாடகை நிர்ணயித்து அதற்கு ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று கூறுவது இந்தி யாவின் வளர்ச்சியைப் பாதிக்கும். இதை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, உடனே வாட கைக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். எங்களின் இந்த அழுத் தமான கோரிக்கையை, மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு தெரிவிக்க வேண் டும்.
சொத்து வரியும் அபரிமிதமாக உள் ளது. அதையும் குறைக்க வேண்டும். நாங்கள் இனிமேல் கட்டிடம் கட்ட முடி யுமா? என்றே தெரியவில்லை. கட்டி டம் வைத்திருப்பவர்கள், அதில் வாங் கும் வாடகை மாநகராட்சிக்கு வரி கட்டு வதற்கே சரியாகி விடும். ஏனென்றால் சொத்துவரி, குப்பை வரி, தண்ணீர் வரி அதற்கு மேல் ஜிஎஸ்டி, இன்கம்டாக்ஸ் என்றால் வாழ்க்கையில் வருமானத் தில் முக்கால் பகுதி வரியிலேயே சென்று விடும். மேலும், மூன்று மின் இணைப்புகள் குடும்பத்தில் இருந் தாலோ, கமர்சியலில் இருந்தாலோ அதை ஒன்றாக இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் கூறியுள்ளது. தந்தை, மகன், மகள் என்று 3 பேர் குடியிருப்பார்கள், தொழில் செய்வார் கள். அதற்கு தனித்தனியாக சர்வீஸ் வேண்டும்.
ஆகையால் பழைய நடை முறையிலேயே அமல்படுத்த வேண் டும். சோலார் முறையில் முழுவதும் நாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத் திற்கு முழு வரி விலக்கு கொடுக்க வேண் டும். மேற்கண்ட தீர்மானங்களை அர சின் கவனத்திற்குக் கொண்டு செல்வ தற்காக நாளை (வெள்ளியன்று) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதென்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து சங்கங்களும் கடையடைப்பும், தொழில் நிறுவனங்க ளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகி றோம்.
மக்கள் வேதனையை வெளிப்படுத் துவதற்காக அடையாள வேலை நிறுத் தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம். 40 ஆயிரம் கடைகள், தொழில் நிறுவனங் கள், தொழிற்சாலைகள், சர்வீஸ் செக் டார் அனைத்தும் ஆதரவு கொடுத்தி ருக்கிறார்கள். இதனால், ஈரோட்டில் மட் டும் 100 கோடி ரூபாய் வியாபாரம் பாதிக் கப்படும். இதன் மூலம் 2 லட்சம் தொழி லாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும். இருந்தாலும் வேறு வழியின்றி நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது, என்றார்.