districts

மின் விநியோக புகார்: வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் ஆட்சியர் தகவல்

ஈரோடு, மே 15- மின்வினியோக புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரி வித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண னுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, பொது மக்கள் மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர்கள் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை வாங்கி பயன்படுத்த வேண் டும். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்கு களையும் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். பழுதடைந்த மின்சார சாத னங்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டில் உள்ள மின் இணைப்புகளை சோதனை செய்து கொள்ள வேண்டும். குளியல் அறை,  கழிப்பறை போன்ற ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம்.  அதேபோல், மின்கம்பங்களில் கால்நடை களை கட்டக்கூடாது. மேல்நிலை மின்கம்பி களுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார  வாரிய அலுவலர்களை அணுகவேண்டும். மின் சாதனங்கள் உபயோகப்படுத்தாத போது சுவிட்ச் ஆப் செய்து வைக்க வேண் டும். மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீ விபத்து ஏற்பட்டால், உடனடி யாக மெயின் சுவிட்சை அணைத்து விட வேண்டும். இடி அல்லது மின்னல் ஏற்படும் போது வெட்டவெளி பகுதியில் இருக்கக் கூடாது. கட்டிடங்கள், உலோகத்தால் கூரை  அமைக்கப்பட்ட பேருந்து, கார், வேன்  போன்ற வாகனங்களில் தஞ்சமடையலாம். இடி அல்லது மின்னலின்போது டி.வி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி அருகில் இருக்கக்கூடாது. மின் கம்பம் சாய்ந்து விழுந்தாலோ, மின் கம்பி அறுந்து விழுந்தாலோ 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், 9445851912 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம் இவ்வாறு அந்த செய் திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.