districts

பர்கூர் வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

ஈரோடு, ஜூன் 24- அந்தியூர் அடுத்த பர்கூர் வனப் பகுதியில் இறந்து கிடந்த பெண் யானையை வனத்துறையினர் பார்வை யிட்டனர்.  ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோயில்நத்தம் காவல் சுற்று வனப்பகுதி யில் புதனன்று பர்கூர் வனகளப்பணி யாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, வட பர்கூர் வனப்பகுதி கவிரி மடுவு என்ற இடத் தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந் ததை கண்டனர். இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜு விஸ்வநாத னுக்கு தகவல் கொடுத்தனர்.

அவரது உத்தரவின் பேரில் பர்கூர் அரசு கால் நடை உதவி மருத்துவர் சுரேஷ், பர்கூர் வனச்சரகர் மணிகண்டன், வனவர் விஜய குமார், வனக்காப்பாளர் முருகன் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த காட்டு யானையின் பிரேதத்தை உடற்கூறு ஆய்வு செய்தனர்.  அதன்பின் சடலத்தை உயிர் சுழற்சி முறையில் மற்ற விலங்குகளின் உணவுக் காக அங்கேயே விட்டு வந்தனர். இறந்த காட்டு யானைக்கு சுமார் 30 வயது இருக்கலாம் எனவும், கால் இடறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

;