districts

img

ஈரோடு இடைத்தேர்தல்:டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு பகுதியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதுவரை 70-க்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு , தேமுதிக மற்றும் பல்வேறு கட்சியினர் போட்டியிடுகின்றனர்.

தேர்தலையொட்டி வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.