districts

img

குழந்தை தொழிலாளர் முறை - 2 ஆண்டுகள்

ஈரோடு, ஜுன் 12- குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தை மீறுவோ ருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்ப டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் -12ஆம் நாள் உலக அளவில்  குழந்தைத் தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினம் அனு சரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி அனைத்து பள்ளி கள், அலுவலகங்கள், அரசு துறைகள், மாவட்ட ஆட்சியர்  அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்க ளிலும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழியினை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள் ளது. 

அதன்படி மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலை மையில், குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற் கான உறுதி மொழி ஏற்கப்பட்டது. 

இச்சட்ட விதிகளை மீறுவோருக்கு ரூ.20ஆயிரம் முதல்  ரூ.50ஆயிரம் வரை அபராதம் அல்லது ஆறு மாதம் முதல் இரண்டாண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண் டும் சேர்ந்து விதிக்கப்படும். இரண்டாம்முறையாக இச்சட்ட  விதிகளை மீறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட குழந்தைத் தொழி லாளரின் பெற்றோர்களுக்கும் ரூ.10ஆயிரம் வரை அபராதம்  விதிக்கப்படும்.

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 14 வயதிற்குட்பட்ட குழந்தை கள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். குழந் தைத் தொழிலாளர்களை அனைத்து பணிகளிலும், வளரிளம்  பருவத்தினரை அபாயகரமான பணிகளிலும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் http://www.pencil.gov.in/ என்ற இணையதளத்திலும், கட்டணமில்லா தொலைபேசி எண்கள்  1800 4252 650 மற்றும் 155214 ஆகிய எண்களிலும் புகார் அளிக்க லாம் என்பது குறிப்பிடத்தக்கது.