ஈரோடு, டிச.9- மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண் டுமென ஆட்டோ தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று கோரிக்கை மனு அளித்தனர். ஆட்டோ மீட்டர் கட்டணம் கடைசி யாக 2013 ஆம் ஆண்டு நிர்ணயம் செய் யப்பட்டது.
அதே கட்டண முறைதான் இன்றைக்கும் அமலில் இருக்கிறது. எரி பொருள் செலவு, சாலை வரி, உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றை யும், ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பத் திற்கு ஏற்படும் செலவுகளான வீட்டு வாடகை, கல்விக் கட்டணம், மருத்து வம் ஆகியவற்றுடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வு என்பதனையும் கணக்கி லெடுத்து கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
இதனடிப்படையில் ஆட்டோ, டேக்சி உள்ளிட்ட வாகனங்க ளுக்கும் பொருந்தக்கூடிய முறையில் செயலியை (App) அறிவிக்க வேண்டும். ஆட்டோக்களுக்கு கொடுத்துள்ள உரிமமானது பதிவு செய்த இடத்தி லிருந்து நகரப் பேருந்து இயக் கும் தூரமான 30 கி.மீ வரை செல் லும். ஈரோட்டில் பர்மிட் பெற்ற ஆட்டோ நகரப் பேருந்துகள் இயக்கக் கூடிய நாமக்கல் மாவட் டத்தின் திருச்செங்கோடு, சேலம் மாவட்டத்தின் சங்ககிரி வரை ஆட்டோ ரிக்சா செல்லலாம். ஆனால். ஈரோடு கிழக்கு போக்குவரத்து வட்டார அலுவலகத்தைச் சார்ந்தவர்கள் ஈரோட்டிலிருந்து நாமக்கல் மாவட்ட எல்லை 5 முதல் 10 கிமீ க்குள் வந்து விடும் இடங்களில் ஆட்டோக்களை தடுப்பது, வழக்கு பதிவு செய்வது என்பது நடைபெறுகிறது.
இதே நிலை இம்மாவட்டத்தின் கொடுமுடி, பெருந்துறை, பவானி ஆகிய பகுதிகளி லிருந்து வரும் ஆட்டோக்களுக்கும் இருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்திட வும், நகரப் பேருந்து இயக்கும் தூர மான 30 கி.மீ. வரை இயக்குவதற்கு எவ் வித இடையூறோ, தடையோ இல்லாம லிருக்க கவனம் செலுத்த வேண்டு கிறோம். ஆன்லைன் அபராத்தை நிறுத் திட வேண்டும். ஆட்டோ தொழிலுக்கு முற்றிலும் விதிவிலக்கு வேண்டும். சட்ட விரோதமான பைக் டாக்சி முறையை தடுத்திட வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட் சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். சுப்ரமணியன், ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவர் வடிவேல், பொதுச் செயலாளர் கண்மணி (எ) ஷேக்தாவூத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.