ஈரோடு, மே 12- ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி மதுபானங்களை ஏற்கனவே வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதன்பேரில்,மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் மேற்கொண்ட ரோந்தில், கடந்த 2 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்றதாக 13 பேரை போலீ சார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 2,200 மதுபாட்டில் கள் பறிமுதல் செய்யப்பட்டன.