districts

img

‘ராம்சார்’ ஸ்தலங்கள் ஆகும் 26 சதுப்பு நிலங்கள்

இராமேஸ்வரம், ஜூன் 15-  தமிழகத்தில் உள்ள 13 சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட நாட்டில் உள்ள  26 சதுப்பு நிலங்களை, ராம்சார் ஸ்தலங்களாக அறிவிக்க ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் நட வடிக்கை மேற்கொண்டு வருகிறது. சதுப்பு நிலங்களின் அழிவைத் தடுப்பதற்காக 2.2.1971 அன்று ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் முதல் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகம் முழு வதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை பொது மக்களிடம் கொண்டு சென்று உள் ளூர், மாநில, தேசிய, சர்வதேச அள வில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு  நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத் தும் வகையில் பிரகடனம் வெளி யிடப்பட்டது. இதற்கு ராம்சார் பிரகட னம் என்று பெயர். இந்த மாநாட்டில் இந்தியா உள்  ளிட்ட 172 நாடுகள் கையெழுத்தி டடுள்ளன. இதனால் சதுப்பு நிலங்க ளைப் பாதுகாக்கும் நடைமுறை களை இந்தியாவும் கடைபிடித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் சதுப்பு  நிலங்கள் 4,975 சதுர கி.மீ. பரப்பள வில் இருப்பதாக கண்டறியப்பட்டுள் ளது. தமிழகத்தில் இராமநாதபுரம், மன்னார் வளைகுடா தீவுகள், திரு வாரூர், தஞ்சாவூர், கடலூர், தூத்துக்  குடி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சதுப்பு நிலங்கள் உள்ளன. ராம்சார் ஒப்பந்தத்தின்கீழ் இந்தி யாவில் 49 சதுப்பு நிலங்கள் பாது காக்கப்பட்ட இடங்களாக அறிவிக் கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 2017-ம்ஆண்டு ஒன்றிய அரசுக்கு தமிழகத்தில் உள்ள 13 சதுப்பு நிலங் களை ராம்சார் ஸ்தலங்களாக அறி விப்பதற்கான முன்மொழிவை தமி ழக அரசு அனுப்பியது. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது ஜெனீவா பயணத்தின்போது ராம்சார் தலை மையகத்தில், அதன் பொதுச் செய லாளர் மார்த்தா ரோஜாஸ் உர்ரே கோவிடம் இந்தியாவில் புதிதாக 26 சதுப்பு நிலங்களை ராம்சார் ஸ்தலங்  களாக அறிவிக்க வலியுறுத்தவுள்ளார். இந்த 26 சதுப்பு நிலங்களில் தமிழ்  நாட்டிலிருந்து சித்திரங்குடி, காஞ்சி ரங்குளம், கூந்தங்குளம், வடுவூர், வெள்ளோடு, வேடந்தாங்கல் மற்றும்  கரிக்கிலி ஆகிய இடங்களில் உள்ள பறவைகள் சரணாலயங்கள், சுசீந்தி ரம், தேரூர், வேம்பன்னூர், பிச்சா வரம், பள்ளிக்கரணை ஆகிய சதுப்பு நிலங்கள் மற்றும் மன்னார் வளை குடா கடல் உயிர்க்கோள காப்பகம் ஆகிய 13 ஸ்தலங்கள் ஆகும். மேலும் ஒடிசாவிலிருந்து 4, மத்தி யப்பிரதேசத்திலிருந்து 3, ஜம்மு-காஷ்மீரில் இருந்து 2 மற்றும் மகா ராஷ்டிரா, மிசோரம், கர்நாடகா மற்  றும் கோவாவில் இருந்து தலா ஒன்று  ஆகியவையும் அடங்கும். இந்த  முன்மொழிவுக்கு ஒப்புக்கொண் டால் இந்தியா தனது 75-வது சுதந்திர ஆண்டில் 75 ராம்சார் ஸ்தலங்களை  கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்  தக்கது.