districts

img

ஒருவாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதிமொழி

இராமேஸ்வரம், பிப்.20- இராமேஸ்வரம் மீனவர்கள் தங்க ளின் காலவரையற்ற வேலைநிறுத் தப் போராட்டத்தை, மாவட்ட ஆட்சி யரின் உறுதிமொழியை ஏற்றுத் திரும்  பப் பெற்றுள்ளனர். அதேநேரம் கச்சத்  தீவு அந்தோணியார் ஆலய திருவிழா  புறக்கணிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்  துள்ளனர். எல்லை தாண்டி வரும் மீனவர் களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்  தண்டனை விதிக்கும் இலங்கை யின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரி வித்தும், கைது செய்யப்பட்ட தமி ழக மீனவர்கள் மற்றும் அவர்களின்  படகுகளை மீட்டுத்தர வேண்டும் என  வலியுறுத்தியும், இராமேஸ்வரம் மீன வர்கள் வேலைநிறுத்தப் போராட் டத்தை துவங்கினர்.

படகுகளில் கருப்புக் கொடி கட்டி  தங்களின் எதிர்ப்பை தெரிவித்த அவர்  கள், பிப்ரவரி 23, 24 ஆகிய தேதி களில் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய விழாவைப் புறக்கணிப்போம் என்றும் அறிவித்திருந்தனர். அத்துடன், இப்பிரச்சனை தொடர்பாக, இராமேஸ்வரம் மீன்பிடி  அனுமதி சீட்டு வழங்கும் அலுவல கத்தில் இருந்து நடைபயணமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் முறையிடுவது என்றும் அறி வித்தனர். நடைபயணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கருணா கரன், இராமேஸ்வரம் தாலுகா செய லாளர் ஜி. சிவா , மாவட்டக்குழு உறுப்பினர் ஜஸ்டின், தாலுகா குழு  உறுப்பினர்கள் அசோக், ராமச்சந் திர பாபு, கார்த்திக் உட்பட ஆயிரத்  திற்கு  மேற்பட்ட மீனவர்கள் கலந்து  கொண்டனர்

. ‘மீனவர்களை விடு விப்பதற்கு, இலங்கைக்கு இந்திய ஒன்றிய அரசு அழுத்தம் தர வேண்  டும்’ என வலியுறுத்தும் பதாகை களையும் மீனவர்கள் ஏந்திச் சென்ற னர்.  முன்னதாக, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு, “இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகு களை விடுவிக்க, ஒன்றிய அரசு உறு தியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார். மீனவர்கள் கைது விவகாரம், விப ரீதமாகிக் கொண்டிருக்கிறது” என் றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் இலங்கைக் கடற் படையால் கைது செய்யப்பட்ட மீன வர்களை விடுவிக்க ஒரு வாரத்திற் குள் நடவடிக்கை எடுக்கப்படும் என  இராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு  சந்திரன் உறுதியளித்த நிலையில்  மீனவர்கள் தங்களது போராட்டத் தைத் திரும்பப் பெற்றுள்ளனர். அதே நேரம், கச்சத்தீவு திருவிழா புறக்க ணிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். இதனிடையே, தில்லியில் ஒன்  றிய வெளியுறவுத் துறை அமைச்சர்  எஸ். ஜெய்சங்கரை சந்தித்த மீனவர்  தலைவர்கள், “பாக் வளைகுடா பகு தியில் இலங்கைக் கடற்படையின ரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் நிலையில், இப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு காண ஒன் றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டுமென வலியுறுத்தியுள்ளார்.