இராமநாதபுரம், டிச.31- வறட்சி நிவாரணம் ஏக் கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி கருகிய பயிர்களுடன் சிக்கல் பகுதி யில் விவசாயிகள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இராம நாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவை வறட்சி பகுதி யாக அறிவித்து விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கூத்தன் கால் வாயை சீரமைத்து வைகை ஆற்றுத் தண்ணீர் செல்வ னூர் மற்றும் சிக்கல் பகுதி யைச் சுற்றியுள்ள கண்மாய் களுக்கும் கிடைத்திட மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் கடலாடி கிழக்கு தாலுகாக்குழு சார்பாக சிக் கல் ஆட்டோ நிறுத்தம் அரு கில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கருகிய பயிர்களுடன் விவசாயிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தாலுகா தலைவர் எஸ். ராம சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வி. மயில்வாகனன், சிபிஎம் கட லாடி கிழக்கு தாலுகா செய லாளர் எஸ்.போஸ், விவ சாயிகள் சங்க தாலுகா செய லாளர் எம்.சுப்பிரமணியன், சிக்கல் ஊராட்சி துணைத் தலைவர் நூரூல் ஹமீன் ஆகியோர் பேசினர்.