அரியலூர், பிப்.7- அரியலூர் மாவட்டம், வி.கை காட்டியை அடுத்துள்ளது ரெட்டிப் பாளையம். இங்கு அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலை செயல்பட்டு வரு கிறது. ஆலையில் ஒப்பந்த அடிப்ப டையில் பணிபுரிந்த தமிழகத் தொழிலாளர்களை வெளியேற்றி விட்டு, வெளிமாநிலத் தொழிலாளர் களுக்கு பணி வழங்குவதைக் கண் டித்து அரியலூரில் சிஐடியு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ஆலையிலி ருந்து வெளியேற்றப்பட்ட உள்ளூர் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மாநிலச் செயலாளர் சி. திருவேட்டை, மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன், மாவட்டச் செயலா ளர் பி.துரைசாமி, மாவட்ட நிர்வாகி கள் ஆர்.சிற்றம்பலம், எம்.சந்தா னம், எஸ்.என். துரைராஜ் துணைச் செயலர் பி.சி.தர்மராஜ் ஆகியோர் உரையாற்றினர். மாநிலம் தழுவிய கோரிக்கை களையும் நிறைவேற்ற வலியுறுத்தி தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.