அரியலூர், ஏப்.13- அரியலூர் தலித் சிறுமி கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக் கில், முதன்மைக் குற்றவாளியைத் தவிர்த்து, ஏனைய 3 குற்றவாளி களும் விடுதலை செய்யப்பட் டுள்ள நிலையில், அவர்களுக்கு எதி ராக மேல்முறையீடு செய்ய வேண் டும் என்று தமிழக அரசுக்கு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநி லத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலச் செயலாளர் அ. ராதிகா ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது தலித் சிறுமியை செந்துறை வட்டம் கீழ மாளிகை கிரா மத்தைச் சேர்ந்த மிகவும் பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளரும் குற்றவாளியுமான நபர் சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி கர்ப்பம் ஆக்கினார்.
பின்னர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று கடத்திச் சென்று தனது உறவினர்களும் கூட்டாளிகளு மாகிய மூன்று நபர்களுடன் சேர்ந்து பல நாட்கள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்து கிணற்றில் வீசிவிட்டார். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள் ளாக்கியது. சிறுமியின் தாயார் இரும்புலிக் குறிச்சி காவல்நிலையத்தில் அளித்த புகார் பேரில் நீண்ட தேடுதலுக்கு பிறகு 20 நாட்கள் கழித்து பாழடைந்த கிணற்றில் மாணவியின் உடல் கண் டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. படுகொலை செய்யப்பட்ட சிறு மிக்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்கள் நடத் தினர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 2020 முதல் அரியலூர் மகளிர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் ஆரம்பம் முதலே காவல்துறை முறையாக வழக்கை பதிவு செய்து உரிய நேரத்தில் தேடு தல் நடைபெறாமல் காலம் கடத்திய துடன் ஆவணங்களை முழுமையாக பதிவு செய்யாமல் விட்டது.
இந்நிலையில் முதன்மைக் குற்ற வாளியான நபருக்கு பல்வேறு பிரிவு களின் கீழ் 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழ மையன்று (ஏப்ரல் 12) அரியலூர் மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்ப ளித்துள்ளார். அதேநேரம் கும்பல் பாலியல் வல்லுறவில் படுகொலை செய்த இதர குற்றவாளிகள் மூவரை நீதி மன்றம் விடுவித்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாகும். வழக்கு விசாரணையை முறை யாக நடத்தாத காவல்துறை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தி இருப்பது வரவேற் கத்தக்கது.
காவல்துறையின் அலட் சியப் போக்கே இவ்வழக்கில் எதிர் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான காரணமாக அமைந்துள்ளது. இழப்பினைச் சந்தித்தபோதும் சிறுமியின் குடும்பம் உறுதியாக நின்று போராட்டத்தை நடத்து வதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த துடன் குற்றவாளிகளுக்கு தண் டனை கிடைப்பதற்கு முழு பலத்து டன் போராடிய குடும்பத்தை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு வாழ்த்துக் கள் தெரிவித்துக் கொள்கிறோம். வழக்கில் சிறப்பு அரசு வழக்கறி ஞராக இருந்து சிறப்பாக பணி களை செய்து வாதாடிய வழக்கறிஞர் அபிராமன் பாராட்டுக்குரியவர்.
அவர்களுடன் பணியாற்றிய வழக்க றிஞர்கள் துரையண்ணன், பகுத்தறி வாளன் ஆகியோரது பணிகளும் பாராட்டுக்குரியது. இந்நிலையில், விடுவிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகளையும் மீண் டும் விசாரணைக்கு உட்படுத்தி அவர்களை தண்டனைக்கு உள் ளாக்கும் வகையில், உடனடியாக மேல்முறையீடு செய்திட தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டு உள்ளது.