அரியலூர், அக்.6- ஊர்க்காவல் படையில் 28 காலிப்பணி இடங்க ளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு வியாழனன்று (அக்.6) அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பெரோஸ் கான் அப்துல்லா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்ட ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் மணவாளன் மற்றும் ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் ஜீவானந்தம் மேற்பார் வையில் முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட 183 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்கூறு அளத்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆண் களுக்கு உயரம் மற்றும் மார்பு அளவீடும், பெண்களுக்கு உயரம் அளவீடும் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படை அதிகாரிகள் உடல் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.