அரியலூர், மார்ச் 14 - அரியலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் ரமண சரஸ்வதி தலை மையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாற்றம், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட 324 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஆட்சி யர் பெற்றார். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா சோழமாதேவி கிராமத்தில் வசிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள், மண் பாண்ட தொழில் மழைக்கால நிவாரண நிதி வழங்கக் கோரி மனு அளித்தனர். அம்மனுவில், தாங்கள் சுமார் 40 குடும்பங்கள் தலை முறை தலைமுறையாக மண்பாண்டம் தொழில் செய்து வருவதாகவும், தமிழக அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக் கால நிவாரண நிதியாக ரூ. 5 ஆயிரம் வழங்கி வந்தது. ஆனால் இந்த ஆண்டு இது வரை தங்களுக்கு நிவாரண நிதி அரசால் வழங்கப் படவில்லை. தங்களது குடும் பத்தினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அரசு உடனடியாக மழைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும். மண்பாண்ட தொழில் செய்ய மண் கிடைப்பதில் பிரச்சனை உள்ளது. அதை நிவர்த்தி செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.