அரியலூர், ஜூன் 14 - கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். 70 வயது முடிவடைந்த ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியமும், 80 வயது முடிந்தவர்களுக்கு மேலும் 10 சதவீத கூடுதல் ஓய்வூதியமும் வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் காசில்லா மருத்துவ திட்டத்தின் கீழ் அனைத்து வகை மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இத்திட்டத்தை செயல்படுத்த வழிவகை செய்ய வேண்டும். ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் அரியலூர் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.