பாபநாசம், செப்.29 - தென் பெரம்பூரில் வெண்ணாற்றிலிருந்து பிரியும் ஜம்புகா வேரி பாசன வாய்க்கால், வடிகாலாக மெலட்டூர் அருகே கொத்தங்குடி வரை பாய்கிறது. இந்த பாசன வாய்க்காலால் கொத்தங்குடியில் சுமார் 800 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதியில் குறுவை அறுவடைக்கு பயிர்கள் தயாராக உள்ளன. இந்நிலையில், கொத்தங்குடி பகுதியில் மட்டும் ஜம்புகா வேரி பாசன வாய்க்கால் தூர்வாரப்படாததால், அதிகளவில் திறக்கப்படும் தண்ணீரால், வாய்க்கால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்படும் அபாய நிலை யுள்ளது. கரைகளில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி யில் அப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம், இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.