districts

img

தென்காசி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு!

தென்காசி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பூலித்தேவன் பிறந்தநாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியையொட்டி தென்காசி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணி வரையும், ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 10 மணி வரையும் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிப்பின் படி 4 பேருக்கு மேல் நின்று கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.