தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கள்ளச் சாராய உயிரிழப்புக்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயகம் மாதர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இரா.சதீஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சந்துரு மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழ் பாரதி மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் பேசினர்.