districts

img

தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்க மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வேண்டுகோள்

குடியாத்தம், மார்ச் 18- தமிழ் மொழியை அடுத்த தலை முறைக்கு எடுத்து செல்ல வேண்டும் என மாணவர்களை மாவட்ட ஆட்சியர்  கேட்டுக் கொண்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்டத்தில் மாபெரும் தமிழக் கனவு எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி  பேசுகையில், தமிழை கட்டாயமாக நாம்  வளர்க்க வேண்டும். தமிழ்மொழி என்பது வரலாற்று கணக்கிட்டு முறைப்படி பார்த்தால்  5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பயன்பாட்டில் இருந்துள்ளது. தொல் காப்பியர் தமிழை எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என வகைப்படுத்தினார்.  3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழை  இவ்வாறு வகைப்படுத்தி எழுதுவதற்கு ஒரு நல்ல சிந்தனை இருந்துள்ளது. அந்த காலத்தில் கல்வெட்டுகளில் எழுதுவது என்பது மிகவும் சிரமமானது. இக்காலகட்டத்தில் பேனா, கரும்பலகை, சாக்பீஸ், அழிப்பான் போன்றவை உள்ளது. ஆனாலும் அவர்கள் கல்வெட்டுகளில் எழுதினார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஒரு கனவு இருந்தது. நமக்கு பின்னால் வரும் தலைமுறையினர் அவற்றை படித்து விட்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது. எனவே இந்த கணிப்பொறி காலத்தில் நமக்கும் கனவு வேண்டும். தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக அகமே அழகு என்ற தலைப் பில் திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி, அரை நூற்றாண்டு ஆட்சியும் அசுரவேக வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஊடகவிய லாளர் செந்தில்வேல் ஆகியோர் பேசினர்.