ராணிப்பேட்டை, ஜூன் 13 - ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம் கூடலூர் சமத்துவ புரம் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி, ஆர்.எஸ்.எஸ் சோளிங்கர் ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ் சமூக வலைதளங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை அவதூராக பேசி விசிக, இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட கட்சிகளின் மீது அவதூறுகளை பரப்புவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இது தொடர்பாக கடந்த திங்களன்று (ஜூன்10) விசி கவைச் சேர்ந்த தமிழ்நாதன் என்பவரிடம் சுரேஷ் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தாக்கிய தாக கூறப்படுகிறது. தொடர்ந்து செவ்வாயன்றும் (ஜூன் 11) தமிழ்நாதனிடம் பாஜக சுரேஷ் வாக்குவாதத் தில் ஈடுபட்டு தகறாறு செய்துள்ளார். தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பாராஞ்சி கட்சி கிளைச் செயலாளர் பிரசாந்த் இரு தரப்பின ரையும் சமாதனப்படுத்தி சமரசம் பேச, சுரேஷ் அவருடைய நண்பர்கள் சேர்ந்து பிரசாந்த் மற்றும் தமிழ்நாதனை சராசரியாக தாக்கியுள்ளனர்.
பாதிக்கப் பட்ட பிரசாந்த், தமிழ்நாதன் இருவரும் உடனடியாக அருகில் இருந்த அரக் கோணம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர். இதையடுத்து, வியாழனன்று (ஜூன் 13) சிபிஎம் அரக்கோணம் தாலுகா செயலாளர் எபிஎம். சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினர் பி. ரகுபதி, தாலுகா குழு உறுப்பினர் கள் தென்னரசு, தா. ஞான முருகன், ஹரி, கார்த்திக், வாலிபர் சங்கம் செ.செந் தில், இரா. செந்தில் குமார், வழக்கறிஞர் நாராயணன், பிரதீப் ஆகியோர் காய மடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து மதத்தின் பெயரிலும், சாதியின் பெயரிலும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் பாஜக நிர்வாகி சுரேஷ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரியும், அனைத்து சமூகத்தினரும் வசிக்கும் சமத்துவபுரத்தில் இலவச குடியிருப்பு ரத்து செய்து, அமைதியான தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் விதமான இத்தகைய குண்டர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க சிபிஎம் மாவட்டக் குழு சார்பில் அரக்கோணம் உதவி காவல் கண்காணிப் பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடலூர் சமத்துவபுரம் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா தொடர்பாக மக்களை ஒன்று திரட்டி வட்டாட்சியரை சந்தித்து மனு கொடுக்கும் இயக்கம் நடத்தியது குறிப்பிடத் தக்கது.