சென்னை, செப்.20- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீன வர்களையும் அவர்களது விசைப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாயன்று (செப்.20) கடிதம் எழுதி யுள்ளார். இலங்கை கடற்படையினரால் 20.09.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளதையும், அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப் பட்டதையும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும், இதுதவிர, ஏற்கெனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் 12 தமிழக மீன வர்கள் விடுதலை செய்யப்பட்டதில் வெளியுறவுத் துறை அமைச்சகம் எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகள் வாயிலாக தீவிர முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.