“இந்த முறையும் மீண்டும் தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிக்கிறது. ஒரு கேபினட் அமைச்சரை தமிழகத்திற்கு பாஜக கொடுத்திருக்க வேண்டும். ஒரு கேபினட் அமைச்சரை அமர்த்த இந்த அரசுக்கு மனமில்லை. விருதுநகர் வாக்கு எண்ணிக்கையின் போது தோல்வியை தழுவியதால் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய பிரபாகரன் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். ஆனால், அடுத்த நாள் சென்னையில் பிரேமலதா பேசுவது சிறு பிள்ளைத்தனமானது. விஜயகாந்த் இருக்கும் பொழுதும் தேமுதிக விருதுநகர் தொகுதியில் தோற்றுள்ளது” என்று விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.