திருவில்லிபுத்தூர், அக்.13- திருவில்லிபுத்தூர் ஸ்ரீ கோகுலம் அறக்கட்டளை- சக்தி சரவணா ஓட்டுநர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம், தமிழ் நாடு பொது மருத்துவம் மற்றும் சுகாதார துறை, நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் சுமைல் பவுண்டேசன் நட மாடும் மருத்துவமனையும் இணைந்து தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்- விருதுநகர் மாவட்ட நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் டாக்ஸி ஓட்டுனர் பயிற்சி பயிலும் 100 பயனாளிகளுக்கு சுகாதார விழிப்பு ணர்வு கருத்தரங்கம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடை பெற்றது. மருத்துவ முகாமில் பொது மருத்துவம், ரத்த பரி சோதனை, ரத்த சோகை எலும்பு முறிவு மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான உடல்நலம் சார்ந்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் இலவசமாக மருந்து கள், மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமிற்கு ஸ்ரீ கோகுலம் அறக்கட்டளை- நிர்வாக செயல் அலுவலரும், சக்தி சரவணா ஓட்டுநர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் நிறுவனருமான எஸ்.முத்து வேல் தலைமை வகித்தார். சுமைல் பவுண்டேசன் நட மாடும் மருத்துவமனையின் சமுதாய நல அலுவலர் இராஜ் குமார் தொடங்கி வைத்தார்.