districts

img

காந்திகிராம பல்கலை.யில் மரக்கன்று நடும் முகாம்

சின்னாளபட்டி,செப்.22- திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையம் மற்றும் இப்கோ நிறுவனம் இணைந்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் முகாம் காந்திகிராம வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்றது.   பல்கலைகழக துணைவேந்தர் (கூடுதல் பொறுப்பு) பேராசிரியர் குர்மித் சிங் தலைமையேற்று ஊட்டச்சத்து பொருட்களின் முக்கியத்துவம் பற்றியும் காய்கறிகள் பழங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் பற்றிய கண்காட்சியினை பார்வையிட்டு உரையாற்றினார்.  கலந்து கொண்ட விவசாயிகளுக்கு காய்கறி விதைகள், நெல்லி, மாதுளை மற்றும் சீத்தாப்பழம் போன்ற பழக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.  இந்நிகழ்ச்சியில் 130க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய பெண்மணிகள், அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

;