நாகர்கோவில், டிச.4- சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப் பதி யில் கார்த்திகை மாத திருஏடு வாசிப்பு திருவிழா டிசம்பர் 4 வெள்ளியன்று மாலை தொடங்கி யது. சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப் பதி யில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்களுக்கு சொன்ன அறிவுரைகள் அடங்கிய திருஏடு (அகலத்திரட்டு) வாசிப் பது வழக்கம். இந்த வருட கார்த்திகை மாத திருஏடு வாசி ப்புத் திருவிழா வெள்ளியன்று தொடங்கியது. விழாவையொட்டி அதி காலை 4 மணிக்கு முத்திரி பத மிடுதலும் 5 மணிக்கு திருநடை திறப்பும், காலை 6 மணிக்கு அய்யாவுக்கு சிறப்புப் பணி விடையும் நடைபெற்றது. மதியம் உச்சிப் படிப்பும், மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து திருஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சியும் நடை பெற்றது. திருஏடு வாசிப்பை பால.ஜனாதிபதி தொடங்கி வைத்து, விளக்க உரையாற்றி னார். பால.யோகாதிபதி முன் னிலை வகித்தார். திருஏட்டை ராஜன், ஆதி நாராயணன் ஆகி யோர் வாசித்தனர். பள்ளியறை பணிவிடை களை யுகேந்த், வைகுந்த் ஆகியோர் செய்தனர். விழாவில் பல மாவட்டங்களை சார்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வருகிற 17 ஆம் தேதி திருக்கல்யாணத் திருஏடு வாசிப்பும், 19 ஆம் தேதி அய்யா வைகுண்டர் சுவாமிக்கு பட்டாபிஷேகம் திருஏடு வாசிப்பும் நடைபெறுகிறது.