districts

img

போராளி பூ.சந்திரபோஸ் நினைவேந்தல்

மதுரை, பிப்.7-  தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவை பொதுச் செயலாளர் - சாதி ஒழிப்பு போராளி பூ.சந்திரபோஸ் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணியின் மதுரை மாநகர் - புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க அலுவலகத்தில் நடை பெற்றது. மாநிலத்தலைவர் த. செல்லக்கண்ணு தலைமை வகித்தார். சமூக செயற்  பாட்டாளர் எம்.ஊர்காவ லன், மக்கள் கண்காணிப்ப கம் இயக்குனர் ஹென்றி டிபேன், தியாகி இம்மானு வேல் பேரவை மையக்குழு உறுப்பினர் லெ.கிருஷ்ண மூர்த்தி, ஆதிதமிழர் கட்சி நிறுவனர் கு.ஜக்கையன், மக்கள் விடுதலை கட்சி நிறு வனர் கா.முருகவேல்ராசன், ஆதிதமிழர் பேரவை மாநில துணை பொதுச்  செயலாளர் கபீர்நகர் கார்த் திக், தமிழ்புலிகள் கட்சி மாநில  பொருளாளர் சி. பேரறிவா ளன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாநகர் மாவட்டச் செயலாளர் எம். பாலசுப்பிர மணியன் ஆகியோர் புக ழஞ்சலி செலுத்திப் பேசினர். மாவட்ட பொருளாளர் ஜா. நரசிம்மன் நன்றி கூறினார். இதில் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர். சசிகலா, புற நகர் மாவட்டம் சார்பில்  தலைவர் செ.ஆஞ்சி, செய லாளர் செ.முத்துராணி புற நகர் பொருளாளர் பி. மகா லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;