districts

img

வாகன நிறுத்த போராட்டத்தை விளக்கி சிஐடியு பிரச்சாரம்

தூத்துக்குடி, டிச.9- பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்தும், விலையை குறைக்க ஒன்றிய அரசை வலியுறுத்தியும் தமிழ கம் முழுவதும் மதியம் 12 மணி முதல் 12.10 வரை 10 நிமிட வாகன நிறுத்த போராட்டத்தை சிஐடியு நடத்துகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ள போராட்டத்தை முன்னிட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் நிகழ்ச்சி வியாழனன்று தூத்துக்குடி புற நகர் பகுதியில் சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலை மையில் முள்ளக்காடு பகுதியில் துவங்கி முத்தையாபுரம் தோப்பு  தெரு பகுதியில் சைக்கிள் பேரணி யாக நிறைவுற்றது.  இதில் சிபிஎம் புறநகர் செயலா ளர் பா.ராஜா, சிஐடியு கட்டுமான சங்க நிர்வாகி முருகன், வெள் ளைச்சாமி, ஜோயி, உப்பு சங்க நிர்வாகி சுப்பையா, வாலிபர் சங்க புறநகர் தலைவர் விக்கி, செயலா ளர் உதய், பொருளாளர் கார்த்தி முத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;