தூத்துக்குடி, செப். 12 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 300 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறி வுறுத்தினார். இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சி யர் ஜேன் கிறிஸ்டி பாய், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.